50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு |
நிதீஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராமாயணா'. இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த மது மந்தெனா அதிலிருந்து விலகினார். அதோடு, படத்தின் மொத்த உரிமையும் தங்களிடம்தான் உள்ளது. அதனால், படத்தைத் தொடரக் கூடாது என அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இதனிடையே, கடந்த வாரம் மீண்டும் ஆரம்பமான 'ராமாயணா' படப்பிடிப்பு சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது என மும்பை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மது மந்தெனாவின் காப்பிரைட் வழக்கு விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்பு படப்பிடிப்பை நடத்த உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அதே சமயம் ரன்பீர் தேதிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டதால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைத்துள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.
ராமராக ரன்பீரும், சீதையாக சாய் பல்லவியும், இராவணனாக யஷ் நடிக்கும் இந்த 'ராமாயணா' படத்தை இரண்டு பாகங்களாகத் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.