வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ஹிந்தியில் அமீர்கானின் மகன் ஜுனைத்கானுடன் 'ஏக் தின்' என்ற படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி, அதையடுத்து 'ராமாயணா' படத்தில் சீதா வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் அவர் நடித்துள்ள சீதாதேவி கதாபாத்திரம் தற்போது வட இந்திய நெட்டிசன்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதோடு இந்த வேடத்தில் அவர் நடிப்பது ராமாயணா காவியத்தை அவமதிப்பது போல் இருப்பதாக கூறி வருகிறார்கள். அது மட்டுமின்றி இதே படத்தில் சூர்ப்பனகையாக நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் போன்ற நடிகைகளுடன் சாய்பல்லவியை ஒப்பிட்டு எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
குறிப்பாக ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ள இந்த படம் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் வெளியானதை அடுத்து ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இப்படி எதிர்மறையான கருத்துக்கள் வெளியான போதும் அதற்கு எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் ராமாயணாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி. இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துவிட்ட நிலையில், தற்போது இரண்டாவது பாகத்திற்கான வேலைகளை தொடங்க தயாராகி வருகிறார். அதோடு இதுவரை தான் நடித்த படங்களை விட இந்த படத்திற்காக கூடுதலான அர்ப்பணிப்பை சாய் பல்லவி செலுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.