ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான 'பரியேறும் பெருமாள்' கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. இதில் நாயகனாக கதிரும், நாயகியாக கயல் ஆனந்தியும் நடித்தனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசயமைத்திருந்தார்.
சாதி பிரச்னையைப் பேசியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சில விருதுகளையும் பெற்றது. இந்த படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. கரண் ஜோகர் தயாரிக்கிறார். படத்திற்கு 'தடக் 2' என்று டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர் நடித்த கேரக்டரில் சித்தார்த் சதுர்வேதியும், கயல் ஆனந்தி நடித்த கேரக்டரில் திரிப்தி டிம்ரியும் நடிக்கிறார்கள். இப்படம் வருகிற நவம்பர் 22ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.