மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம் மற்றும் பலர் நடிப்பில் ஜூன் 18, 2010ல் வெளிவந்த படம் 'ராவண்'. அப்படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆனது குறித்து அபிஷேக் பச்சன் ரசிகர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவைக் குறிப்பிட்டு, “மறக்க முடியாத ஒரு நடிப்பு அபிஷேக். உனது மற்ற படங்களில் இருந்து மாறுபட்ட நடிப்பு இந்தப் படத்தில்… அதுதான் ஒரு கலைஞரின் உண்மையான மதிப்பு,” என்று குறிப்பிட்டிருந்தார் அபிஷேக்கின் தந்தையும், நடிகருமான அமிதாப் பச்சன்.
அந்தப் படத்தில் அபிஷேக் ஜோடியாக நடித்தது அமிதாப்பின் மருமகளும், அபிஷேக்கின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய். ஆனால், ஐஸ்வர்யா பற்றி தனது பதிவில் ஒரு வார்த்தையைக் கூட அமிதாப் குறிப்பிடவில்லை. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அவரது கமெண்ட் பகுதியில் ஏன் ஐஸ்வர்யா பற்றி சொல்லவில்லை என்று கேட்டுள்ளனர்.
அபிஷேக், ஐஸ்வர்யா பற்றி அடிக்கடி பிரிவு வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது போன்று அவரைக் குறிப்பிடாமல் அவரது மாமனாரே பதிவிடும் போது அடங்கிய வதந்திகள் மீண்டும் எழுகின்றன.