தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் |

ஹிந்தி மற்றும் போஜ்புரி மொழிகளில் புகழ்பெற்ற நடிகர் ரவி கிஷன். தமிழில் டி.ராஜேந்தர் இயக்கிய ‛மோனிஷா என் மோனலிசா' படத்தில் நடித்துள்ள இவர், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‛சங்கத்தமிழன்' படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அபர்ணா சோனி என்பவர் நானும் நடிகர் ரவி கிஷனும் ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்ததாகவும் தனது மகள் சினோவா சோனிக்கு, ரவிகிஷன் தான் தந்தை என்றும் கூறி லக்னோ நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். ஆனால் இதை எதிர்த்து ரவி கிஷனின் மனைவி பிரீத்தி சுக்லா, அபர்ணா சோனி தன்னிடம் 20 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து அபர்ணா சோனி, அவரது மகள் சினோவா சோனி மற்றும் கணவர் ராஜேஷ் சோனி ஆகியோர் மீது எப் ஐ ஆர் போடப்பட்டது.
இந்த நிலையில் இந்த புதிய வழக்கால் தனக்கு சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்து ரவி கிஷன் மீது தான் தொடுத்த வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றும் அதற்கு பதிலாக ரவி கிஷனின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் தங்கள் மீது பதியப்பட்ட எப்.ஐ.ஆர்-ஐ நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் புதிய கோரிக்கை மனு அளித்துள்ளார் அபர்ணா சோனி. இதன் அடிப்படையில் நீதிமன்றம் அவரது வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதே சமயம் ரவி கிஷனின் மனைவி, தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வாரா என்பது பற்றி இன்னும் எந்த தகவலும் தெரியவில்லை.