பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
புதுடில்லி : பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு(74) இந்திய சினிமாவின் மிக உயரிய விருதனா தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. ‛மிர்கயா' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திற்கே சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். தொடர்ந்து பாலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்தார். குறிப்பாக இவரின் ‛டிஸ்கோ டான்சர்' படம் ஹிந்தி சினிமாவை தாண்டி இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பிரபலமானது. குறிப்பாக அந்த படத்தில் வரும் ‛ஐ யம் ஏ டிஸ்கோ டான்சர்' பாடல் இந்திய அளவில் பிரபலமானது. ‛தி நக்சலைட்டிஸ், கவாப், கஸ்தூரி, சித்தாரா, ஹிம்மத்வாலா, அக்னிபாத்' உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்துள்ளார். நிறைய டிவி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். பெங்காலி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
1989ம் ஆண்டில் 19 படங்களில் நடித்தமைக்காக லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். மூன்று முறை தேசிய விருது, பிலிம் பேர் விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார். இந்தாண்டு பத்ம பூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
சினிமாவை தாண்டி அரசியலிலும் உள்ள இவர் தற்போது பா.ஜ., கட்சியில் உள்ளார். முன்னாள் ராஜ்யசபா எம்பி.,யாகவும் இருந்துள்ளார். சினிமாவில் இவரது கலைச் சேவையை பாராட்டி மத்திய அரசு இந்திய சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்துள்ளது.
தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள மிதுன் சக்கரவர்த்திக்கு பாலிவுட் திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.