திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பாலிவுட் சினிமாவில் பல படங்களில் இணைந்து நடித்த ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார் தீபிகா படுகோனே. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அவர் வெளியிட்டார். அதோடு கர்ப்பமாக இருந்த போது பிரபாஸ் உடன் கல்கி படத்தில் நடித்து வந்த தீபிகா, அதன் பிறகு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது அந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது அந்த குழந்தைக்கு துவா படுகோனே சிங் என பெயர் வைத்திருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்துள்ளார்கள். இதையடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.