தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய திரைப்பட விழா கோவாவில் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழா. இந்தாண்டுக்காகன 55வது பட விழா கோவாவில் நவ., 20ம் தேதி துவங்கியது. இந்த விழாவில் பல்வேறு தலைப்புகளில் திரைப்பிரபலங்கள் பங்கேற்று பேசினர். அதில் சினிமாவில் புதியவர்களுக்கான வாய்ப்பு குறித்து பாலிவுட்டின் முன்னணி நடிகை கிர்த்தி சனோன் பேசினார்.
அவர் கூறுகையில், ‛‛நான் சினிமாவில் அறிமுகமானதில் இருந்து பாலிவுட் எனக்கு வரவேற்பு கொடுத்து வருகிறது. சினிமா பின்னணி இல்லாமல் ஒருவர் வந்தால் அவருக்கான அடையாளம் கிடைக்க காலதாமதம் ஆகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம் இரண்டு மூன்று படங்களுக்கு பின் நீங்கள் கடினமாக உழைத்தால் உங்கள் வெற்றி, சாதனையை யாராலும் தடுக்க முடியாது. நெப்போடிசத்திற்கு பாலிவுட்டை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. பார்வையாளர்களும், ஊடகங்களும் ஒரு காரணம். ஏனென்றால் அவர்களை பெரிதாக காட்டுவதால் ரசிகர்களின் எண்ணமும் அப்படியே அமைகிறது. இது ஒரு வட்டம் போலத்தான். என்னை பொறுத்தவரையில் திறமை இருந்தால் உங்களுக்கான வாய்ப்பு நிச்சயம் தேடி வரும், திறமை இல்லை என்றால் வாய்ப்புகள் குறைவு தான்'' என்றார்.




