2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே ஆயிரம் கோடி வசூல் என்கிற மாபெரும் இலக்கை தாண்டிவிட்டது. தற்போது 1700 கோடி வசூலை தாண்டி உள்ளது. தென்னிந்தியாவில் மட்டுமல்ல வட மாநிலங்களிலும் புஷ்பா 2 படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் இந்த படத்திற்கு வடமாநிலங்களுக்கு சென்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். தற்போது படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியுள்ள நிலையிலும் தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் இருக்கிறது.
அதேசமயம் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸ் ஆக வரும் தவான் நடித்த பேபி ஜான் என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று ஜெய்ப்பூரில் உள்ள புகழ் பெற்ற ராஜ் மந்திர் என்கிற தியேட்டரில் புஷ்பா 2 காலைக்காட்சி படம் பார்க்க புக்கிங் செய்து வந்த ரசிகர்களை காட்சி ரத்தானதாக கூறி அதற்கு பதிலாக பேபி ஜான் படத்தை பாருங்கள் இன்று தியேட்டர் நிர்வாகத்தினர் வற்புறுத்தியுள்ளனர். கூட்டம் குறைவாக இருந்ததால் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள் அந்தக் கட்டணத் தொகையை திருப்பித் தருவதற்கு பதிலாக பேபி ஜான் திரைப்படத்தை பார்க்க வற்புறுத்தியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
குறிப்பாக 20 நபர்கள் இருந்தாலே ஒரு காட்சியை ரத்து செய்யாமல் திரையிட வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஆட்கள் நிறைய பேர் வந்தும் கூட புஷ்பா 2 காட்சியை ரத்து செய்தது பேபி ஜான் திரைப்படத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காகத்தான் என ரசிகர்கள் பலர் கொந்தளித்து தியேட்டர் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனராம்.