ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நம்மூரில் நடக்கும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி போன்று மும்பையில் ‛மலாட் மஸ்தி' நிகழ்ச்சி பிரபலம். இசை, பாட்டு, ஆட்டம் என பலரும் பங்கேற்று மகிழ்வர். இந்தாண்டு மும்பையில் நடந்த மலாட் மஸ்தி 2025 நிகழ்ச்சியை எம்எல்ஏ அஸ்லம் ஷேக் ஏற்பாடு செய்தார். இதில் நடிகர்கள் சோனு சூட், ஜாக்குலின் பெர்ணான்டஸ், ரஷா ததானி, அமன் தேவ்கன் போன்ற பிரபலங்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய சோனு சூட், ‛‛மிகவும் சிறப்பான நாள். எங்களின் பதே படம் ஜன., 10ல் ரிலீஸாகிறது. முதல்முறையாக நான் படத்தை இயக்கி உள்ளதால் இன்னும் சிறப்பானது. ஜாக்குலின் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் இயக்குனராக பணிபுரிவது மகிழ்ச்சியாக இருந்தது. எதற்கு ஹாலிவுட் போன்ற படத்தை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூறுவார்கள். அப்படியொரு படம் எடுப்போம் என்றேன். இப்போது இந்த படத்தை பார்த்துவிட்டு ஹாலிவுட்காரர்கள் ஏன் இதுபோன்ற படத்தை எடுக்க கூடாது என நினைப்பார்கள்'' என்றார்.
ஜாக்குலின் கூறுகையில், ‛‛முதல்முறையாக மலாட் மஸ்தியில் பங்கேற்கிறேன். ஜன.,10ல் திரையரங்குகளில் எங்கள் பதே படம் வருகிறது. நீங்கள் ரசிப்பீர்கள்'' என்றார்.
ராஷா கூறுகையில், ‛‛நான் இங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களது ஆசாத் திரைப்படம் ஜனவரி 17 அன்று வெளியாகவுள்ளது. நீங்கள் அனைவரும் எங்கள் படத்தை தியேட்டரில் பாருங்கள்” என்றார்.
அஜய் தேவ்கனின் மருமகன் அமன் தேவ்கனும், ரவீனா டாண்டனின் மகள் ரஷா ததானியும் ஆசாத் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.