தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பாலிவுட்டில் இருந்து தென்னிந்திய சினிமாவுக்கு வந்தவர் வாமிகா கபி. தமிழில் 'மாலை நேரத்து மயக்கம், இரவாக்காலம்' படங்களில் நடித்தார். தற்போது 'ஜீனி' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பான் இந்தியா படமாக தயாராகி வரும் 'ஜி2' படத்தில் ரகசிய உளவு பிரிவு ஏஜெண்டாக நடிக்கிறார். ஆதவ் சேஷ் படத்தின் நாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக இம்ரான் ஹாஷ்மி நடிக்கிறார்.
இவர்கள் தவிர, முரளி ஷர்மா, சுப்ரியா யர்லகட்டா மற்றும் மது ஷாலினி உட்பட பலர் நடிக்கின்றனர். பீப்பிள் மீடியா பேக்டரி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் - மற்றும் ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் சார்பில் டி ஜி விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார்கள்.
படத்தில் நடிப்பது பற்றி வாமிகா கபி கூறும்போது “இந்த படத்தில் நான் 'உளவு ஏஜெண்ட் 116' என்ற கேரக்டரில் நடிக்கிறேன். ஐரோப்பிய நாட்டில் இந்தியாவுக்கு எதிராக நடக்கும் சதியை முறியடிப்பது மாதிரியான கதை. 'ஜி 2' எனும் அற்புதமான திரை அனுபவத்தின், நம்பமுடியாத பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த ஸ்பை உலகில் அடியெடுத்து வைத்தது சிலிர்ப்பான மற்றும் சவாலான அனுபவமாக இருந்தது. மிகத் திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணிபுரிவது, என் கதாபாத்திரத்திற்கு புதிய ஆற்றலைக் கொண்டுவர எனக்குப் பேருதவியாக அமைந்தது” என்றார்.




