திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பிரயாக்ராஜ் : பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, மகா கும்பமேளாவில் துறவறம் பூண்டார். இனி அவர், மாய் மம்தா நந்த் கிரி என்ற பெயரில் அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் மம்தா குல்கர்னி, 50. இவர், தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய 'நண்பர்கள்' படத்தில் நாயகியாக நடித்தவர். சினிமாவில் படிப்படியாக விலகிய இவர், கடந்த 2012ம் ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் கலந்து கொண்டார். ஆன்மிகத்தின் மீது எழுந்த ஈடுபாடு காரணமாக, காவி உடைகளை அணியத் தொடங்கினார்.
25 வருடங்களுக்குப் பிறகு இந்தியா வந்த அவர் பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவிற்கும் சென்று முழுமையான துறவறம் மேற்கொள்வதாகவும் பதிவிட்டிருந்தார். இதன்படி அவர் நேற்று (ஜன.24) மகா கும்பமேளாவின் கின்னர் அகாடாவிற்கு வந்தார். அங்கு, அதன் தலைவரான ஆச்சார்யா லஷ்மி நாராயண் திரிபாதியை சந்தித்து பேசினார். அப்போது, தமக்கு மகா மண்டலேஷ்வர் பதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்த மம்தா குல்கர்னி, இதற்காக முழு துறவறம் பூண்ட தயாராக இருப்பதாகக் கூறினார்.
இவரது கோரிக்கையை ஏற்ற பிறகு முறையான சடங்குகளை செய்து, மம்தா குல்கர்ஜி முழு துறவறம் பூண்டார். அவருக்கு ஷியாமாய் மம்தாணந்த் கிரி எனப் புதிய பெயரிடப்பட்டது. இதையடுத்து, திரிவேணி சங்கமத்தில் நீரடிய அவருக்கு மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கப்பட்டது.