படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

லஷ்மண் உடேகர் இயக்கத்தில், விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ஹிந்திப் படம் 'ச்சாவா'. மராத்திய மன்னரான சத்ரபதி சம்பாஜி மகாராஜ் வாழ்க்கை வரலாற்றை மையப்படுததிய சரித்திரப் படமாக வெளிவந்த இந்தப் படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற கனோஜி, கன்ஹோஜி ஷிர்கே கதாபாத்திரங்களைத் தவறுதலாகக் காட்டியிருப்பதைக் கண்டித்து அவர்களது சந்ததியினர் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளனர். படத்தில் அவர்கள்தான் சம்பாஜி மகாராஜை முகலாயர்களிடம் காட்டிக் கொடுத்ததாகவும், அதுதான் அரை கொடூரமாக தூக்கிலிடக் காரணமாக வழிவகுத்தது என காட்டப்பட்டுள்ளது.
வரலாற்றைத் திரித்து, தவறான சித்தரிப்புகளால் தங்களது குடும்ப நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக 'ச்சாவா' தயாரிப்பாளர்களை ஷிர்கே சந்ததியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். பிப்ரவரி 20ம் தேதி அவர்கள் இயக்குனர் லஷ்மண் உடேகருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஷிர்கே சந்ததியைச் சேர்ந்த பூஷன் ஷிர்கே என்பரை அணுகி இயக்குனர் லஷ்மண் உடேகர் மன்னிப்பு கேட்டுள்ளார். “ஷிர்கே குடும்பத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. படம் ஏதேனும் அசௌகரியத்தை ஏற்படுத்தி இருந்தால், நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 'ச்சாவா' படத்தில் கனோஜி மற்றும், கன்ஹோஜி பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். அவர்களின் குடும்பப் பெயரையோ அல்லது அவர்களின் கிராமத்தையோ குறிப்பிடவில்லை,” என்று கூறியுள்ளார்.
இருந்தாலும் 'ச்சாவா' தயாரிப்பாளர்கள் சர்ச்சைக்குரிய அந்த காட்சிகளை நீக்கத் தவறினால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என ஷிர்கே சந்ததியினர் எச்சரித்துள்ளனர்.




