மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் |
பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஊர்வசி ரத்தேலா. தமிழில் 'த லெஜன்ட்' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வந்த 'டாகு மகாராஜ்' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
ஊர்வசி நேற்று அவருடைய 32வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அதற்காக வைரத்தால் ஆன ஆடையை அணிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீளமான கவுன் ஒன்றில் வைரங்களும், கண்ணாடிகளும் பதிக்கப்பட்டதாக அந்த ஆடை உள்ளது.
“நீங்கள் அனைவரும் என்னுடன் இருந்து பரிசுகள், வாழ்த்துகளைத் தந்ததற்கும், அன்பைப் பொழிந்ததற்கும் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது, என் மனதில் இருந்து நன்றி,” என நன்றி தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் எப்படிப்பட்ட பேஷனான ஆடைகள் அணிவது என்பது நடிகைகளுக்குள் இருக்கும் முக்கியமான ஒரு போட்டி. ஊர்வசியின் இந்த வைர ஆடை, பேஷன் ஆர்வலர்கள் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.