ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முன்னணி பாலிவுட் குணசித்ர நடிகராக இருந்தவர் உத்தம் மொகந்தி. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர் ஒடிசா, பெங்காலி, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உத்தம் மொகந்திக்கு கல்லீரல் பாதிப்பு பிரச்னை ஏற்பட்ட பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிக்சை பலன் இன்றி நேற்று இறந்தார். அவருக்கு வயது 66. அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மரணம் அடைந்த உத்தம் மொகந்திக்கு அபராஜிதா என்ற மனைவியும், மகனும் உள்ளனர்.
உத்தம் மொகந்தியின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார். அதோடு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "ஒடிசாவின் பிரபல நடிகர் உத்தம் மொகந்தியின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது மறைவு ஒடியா கலைத் துறையில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடியா திரையுலகில் அவர் ஏற்படுத்திய தாக்கம் அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, துயருற்ற குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.
மறைந்த உத்தம் மொகந்தி, ஒடியா சினிமாவில் பலமான ஆளுமையாக இருந்தார். ஒடிசா மாநில அரசின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார். அவரது உடலுக்கு முதல்வர் மோகன் சரண் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடந்தது.