ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'சர்க்கார், தர்பார்' படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்காத நிலையில் ஏ ஆர் முருகதாஸின் திரையுலக பயணம் இனி அவ்வளவுதான் என்று பலரும் நினைத்தபோது, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஒரு பக்கம் சிவகார்த்திகேயனை வைத்து 'மதராசி' படத்தை துவங்கினார். அதேசமயம் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பும் வந்தது. அதனால் மதராசி படத்தை விட சிக்கந்தர் படத்தில் கூடுதல் கவனம் செலுத்தி விறுவிறுப்புடன் படத்தை முடித்துள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
வரும் மார்ச் 30ம் தேதி (ஞாயிறு) இந்த படம் குடி பத்வா மற்றும் யுகாதி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தை சல்மான்கானின் மொத்த குடும்பமும் சிறப்பு காட்சி திரையிடல் மூலம் பார்த்து ரசித்திருக்கின்றனர். இந்த நிகழ்வில் இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸும் பங்கேற்றுள்ளார். இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நாடியத்வாலா தயாரித்துள்ளார். 2014ல் வெளியான 'கிக்' படத்தை தொடர்ந்து பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சல்மான்கானை வைத்து அவர் தயாரிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.