தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ் திரையுலகம் என்கிற அளவிலேயே தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வந்த சத்யராஜ், ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் ரொம்பவே பிரபலமாகிவிட்டார். தற்போது பெரிய ஹீரோக்களின் படங்களில் வில்லனாக மற்றும் முக்கிய வேடங்களில் மீண்டும் பிஸியாக நடிக்க துவங்கியுள்ளார் சத்யராஜ்.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் உடன் 'கூலி' படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு அவருடன் இணைந்து நடித்துள்ளார். அதேபோல ஷாருக்கானுடன் இணைந்து 'சென்னை எக்ஸ்பிரஸ்' என்கிற படத்தில் நடித்த சத்யராஜ், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஹிந்தியில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்கந்தர்' என்கிற படத்திலும் மெயின் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மும்பையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வில் சத்யராஜ் பேசும்போது, “சல்மான் கானின் தந்தை சலீம் கானை சந்திக்கும் பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நான் கல்லூரி படிக்கும் காலத்தில் சலீம்-ஜாவேத் இருவரும் தங்களது கதைகள் மூலம் எத்தனை ஹீரோக்களை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். அவரை சந்தித்தது எனக்கு கிடைத்த பாக்கியம். சொல்லப்போனால் இந்த படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்ததை விட அவருடைய தந்தையை நான் சந்தித்ததைத்தான் மிகப்பெரிய வாய்ப்பாக நினைக்கிறேன்” என்று கூறினார். தந்தையை பற்றி சத்யராஜ் பெருமையாக கூறியதைக் கேட்டதும் சல்மான் கானுக்கு முகத்தில் மகிழ்ச்சி பொங்கியதை பார்க்க வேண்டுமே..




