ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான ஹிந்திப் படம் 'சிக்கந்தர்'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். படத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். 'அவுட்டேட்டட்' கதை, காட்சிகள் என படம் போரடிக்க வைத்துள்ளது.
ஷங்கர் போல ஏஆர் முருகதாஸும் இப்படி ஏமாற்றிவிட்டாரே என தமிழ் ரசிகர்களும் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். ஷங்கர் இயக்கத்தில் கடந்த வருடம் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'இந்தியன் 2', ராம் சரண் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' ஆகிய இரண்டு படங்களுமே 'அவுட்டேட்டட்' என்ற விமர்சனத்தைத்தான் பெற்றன. அதேபோல 'சிக்கந்தர்' படமும் அமைந்துவிட்டது.
ஏஆர் முருகதாஸ் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்க 'மதராஸி' என்ற படத்தையும் இயக்கி வருகிறார். 'சிக்கந்தர்' படத்தைப் பார்த்து மிரண்டு போயுள்ளவர்கள் தற்போது 'மதராஸி' படம் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.