ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் சமீபகாலமாக சர்ச்சையாக ஏதாவது பேசி பரபரப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். பொதுவாகவே சினிமாவை தாங்கள் என்ன கண்ணோட்டத்தில் எடுக்கிறோமோ அப்படியே ரசிகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்பும் அவர் இதில் சென்சார் போர்டு குறுக்கீடு செய்வதை அவ்வப்போது எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஹாலிவுட்டில் வெளியாகி உள்ள ஸின்னர்ஸ் (sinners) என்கிற திரைப்படம் சமீபத்தில் இந்தியாவில் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தை பார்த்துள்ள அனுராக் காஷ்யப் மீண்டும் சென்சார் போர்டுக்கு எதிராக குரல் எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ஒவ்வொரு படத்திலும் புகை பிடித்தல் மற்றும் மது உள்ளிட்ட போதைப் பொருள்களை பயன்படுத்தும் போது அது குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறுவது, ஸின்னர்ஸ் படத்தின் இயக்குனர் உருவாக்கும் ஒரு டென்ஷனுடன் பயணிக்க முடியாதபடி படம் பார்க்கும் ரசிகர்களின் மூடை கெடுக்கிறது. எதற்காக இந்த வாசகங்களை அந்த காட்சிகளில் இடம்பெறச் செய்ய வேண்டும் அது தேவையற்றது” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக பத்து வருடங்களுக்கு முன்பே தான் இயக்கிய அக்லி என்கிற படத்தில் கூட சென்சார் போர்டு இப்படிப்பட்ட வாசகங்களை இடம் பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியபோது அதற்கு எதிராகவும் அப்போது அவர் குரல் கொடுத்தார் அனுராக் காஷ்யப். ஆனாலும் வேறு வழியின்றி அந்த வாசகங்கள் இடம்பெற்ற பின்னரே அந்த படத்தை அவர் ரிலீஸ் செய்ய முடிந்தது குறிப்பிடத்தக்கது.