சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க உள்ள 'ஸ்பிரிட்' படத்தில் நடிக்க பேசப்பட்டு அதிலிருந்து தீபிகா படுகோனே விலகியதாக செய்திகள் வெளியானது. அவருக்குப் பதிலாக திரிப்தி டிம்ரியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தார்கள். இருந்தாலும் 'ஸ்பிரிட்' படத்தின் கதையை வெளியிட்டதாக தீபிகா பெயரைக் குறிப்பிட்டாமல் 'டர்ட்டி பி.ஆர். கேம்ஸ்' என சந்தீப் ரெட்டி வங்கா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அவர் தீபிகாவையும், அவரது பி.ஆர் குழுவினரையும்தான் அப்படி கடுமையாக விமர்சித்துள்ளதாக பரபரப்பானது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தீபிகா படுகோனே, “உண்மையாகவும், நம்பத் தகுந்ததாகவும் இருப்பதுதான் என்னை சமநிலையில் வைத்துள்ளதாக நான் நினைக்கிறேன். சிக்கலான சூழல் அல்லது கடினமான சூழலை நான் எதிர்கொள்ளும் போதெல்லாம், எனது உள்மன குரலைக் கேட்டு முடிவுகளை எடுப்பேன். எனக்கு நிறைய அமைதியைத் தரும் முடிவில் உறுதியாக நிற்பதுதான் நான் மிகவும் சமநிலையில் இருப்பதாக உணர்கிறேன் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
'ஸ்பிரிட்' படம் ஆரம்பத்திலேயே இப்படி ஒரு சர்சைசையை ஏற்படுத்திவிட்டது. போகப்போக இன்னும் எந்த மாதிரியான சர்ச்சைகள் வரப் போகிறதோ என பிரபாஸ் ரசிகர்களும் தவிப்புடன்தான் இருக்கிறார்கள்.