மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் |
நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி 1000 கோடிக்கும் அதிகம் வசூலித்த படம் 'கல்கி 2898 எடி'. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஆரம்பமாகும் என்றார்கள். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் படத்திலிருந்து நாயகி தீபிகா படுகோனே விலக வாய்ப்புள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. கடந்த வருடம் குழந்தை பிறந்த பிறகு சினிமாவில் நடிக்க ஆறு முதல் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்வேன் என தீபிகா 'கண்டிஷன்' போட்டுள்ளாராம். அதன் காரணமாகவும் அவர் நடிக்கவிருந்த 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து பேச்சுவார்த்தையுடன் விலகினார். அவருக்கும் அப்படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவுக்கும் அது தொடர்பாக சண்டை நடந்து அவர் மறைமுகமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டது வரை நடந்தது.
தற்போது 'கல்கி 2' குழுவினரும் தீபிகாவின் ஆறு முதல் எட்டு மணி நேர வேலையை ஏற்க மறுப்பதாகவும், அவருடைய காட்சிகளைக் குறைக்கலாமா அல்லது முழுவதுவமாக நீக்கிவிடலாமா என யோசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
தீபிகாவின் இந்த குறிப்பிட்ட சில மணி நேர வேலைக்கு பாலிவுட் பிரபலங்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.