'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை |
பாலிவுட்டில் தற்போதும் முன்னணி நடிகை வரிசையில் இருந்துகொண்டு பரபரப்பு செய்திகளில் இடம் பிடிப்பவர் நடிகை வித்யா பாலன். ஒரு காலகட்டத்தில் அவர் நடிக்கும் படங்கள் அவரைப் பற்றி பரபரப்பாக பேச வைத்தன. சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிடும் ரீல்ஸ் வீடியோக்களும் மீடியாக்களில அவர் கொடுக்கும் பேட்டிகளும் ரசிகர்களிடம் அவரை பற்றி தொடர்ந்து பேச வைத்துக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வித்யா பாலன் பேசும்போது, “ஒரு படத்தில் ஒரு நடிகருடன் மிக நெருக்கமான முத்தக் காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. அந்த காட்சியை படமாக்குவதற்கு சற்று முன்பாக தான் அவர் சைனீஸ் உணவு வகைகளை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தார். சாப்பிட்டவுடன் கொஞ்ச நேரத்திலேயே அந்த காட்சியில் அவர் நடிக்க வந்தபோது அந்த உணவு வாடை அப்படியே இருந்தது. அவரிடம் நீங்கள் பிரஷ் பண்ணவில்லையா என்று கேட்டதற்கு, எதற்காக என்று திருப்பி கேட்டார். உடனே அவரிடம் உங்களுக்கு பார்ட்னர் என யாராவது இருக்கிறாரா என்று கேட்டேன். அதன்பிறகு தான் அந்த நடிகர் புரிந்துகொண்டு சென்று பிரஷ் பண்ணி விட்டு வந்து நடித்தார்” என்கிற ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் வித்யா பாலன்.