தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஹிந்தியில் வித்தியாசமான படங்களை இயக்கி பிரபலமானவர் அனுராக் காஷ்யப். ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரின் ஒவ்வொரு படமும் வெவ்வேறு கதைக்களத்தில் வித்தியாசமான படைப்புகளாக இருக்கும். அந்த வகையில், அவரது அடுத்த படமாக 'நிஷான்சி' எனும் படத்தை இயக்கியுள்ளார். நாளை (செப்.,19) ரிலீசாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது அனுராக் பிஸியாக உள்ளார்.
புரமோஷன் நிகழ்ச்சியில் அனுராக் காஷ்யப் கூறியதாவது: நிஷான்சி திரைப்படம் பப்ளூ, டப்ளூ எனும் இரண்டு சகோதரர்களைப் பற்றிய கதை. ஒருவர் குற்றவாளி, மற்றொருவர் இன்ஜினியர். இந்த கதை 1986ல் துவங்கி, 2016ல் முடிவடைகிறது. 70களின் சினிமா ஞாபகங்களை தூண்டும் வகையில் காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
ஆயிஷ்வரி தாக்கரே அற்புதமான நடிகர். இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அது மிகவும் சவாலானது. இரண்டு கதாபாத்திரங்களையும் சிறப்பாக செய்துள்ளார். நான் சினிமா துறையில் வந்ததிலிருந்து, இதுவரை நான் பார்த்த சிறந்த அறிமுகங்களில் இவரும் ஒருவர். முதல் படத்திலேயே இப்படியான கனமான நடிப்பை காண்பது அபூர்வம்.
நான் பெங்களூருக்கு குடிபெயர்ந்தது பற்றி கேட்கிறீர்கள். பெரிய நகர வாழ்க்கை எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. அமைதியான சூழல் எழுதுவதற்குத் தேவைப்பட்டது. அதனால் தான் பெங்களூருக்கு வந்தேன். நிஷான்சி படத்தின் முழு எழுத்தும் நான் பெங்களூருவில் தான் எழுதினேன். இங்குள்ள சூழல் அமைதியாக இருக்கிறது.
நடிப்பு
இயக்கத்தில் இருந்து நடிப்புக்கு வந்தது பற்றி கேட்கிறீர்கள். நடிப்பு என் விருப்பத்தால் வந்தது அல்ல, கட்டாயத்தால் வந்தது. ஒரு கட்டத்தில் நான் மன அழுத்தத்தில் இருந்தேன். அதே சமயம் என் மகள் திருமணம் செய்ய விரும்புவதாக சொன்னாள். தந்தையாக என் கடமை அதை ஆதரிப்பது. ஆனால் அந்த சமயத்தில் என்னிடம் போதுமான பணம் இல்லை. இயக்குனராக சம்பாதிக்கவே சில ஆண்டுகள் தேவைப்படும்; ஆனால் ஒரு நடிகராக இருந்தால் ஒரு மாதத்திலேயே சம்பாதித்துவிடலாம். அதனால் தான் நடிக்க துவங்கினேன்; நடிப்பு, இயக்கம் இரண்டையும் செய்தேன். அப்போதுதான் ஒரு நடிகர் எவ்வளவு கடுமையாக உழைக்கிறார் என்பதை உணர்ந்தேன். இவ்வாறு அவர் பேசினார்.




