குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. தெலுங்கில் 'கல்கி 2898 ஏடி' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க உள்ள 'ஸ்பிரிட்' படத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால், அப்படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாகவும், இல்லை, இல்லை நீக்கப்பட்டார் என்றும் செய்திகள் வந்தன. அதற்கடுத்து 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்கவில்லை என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்கள்.
தீபிகா, ரன்வீர் சிங் தம்பதியினருக்கு ஒரு வயதியில் பெண் குழந்தை உள்ளது. குழந்தையையும், குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக 8 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்க்க முடியாது என அவர் கறாராக சொல்லிவிட்டார், அதனால்தான் அவரைப் படத்திலிருந்து நீக்கினார்கள் என்ற ஒரு பரபரப்பு எழுந்தது.
இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து தீபிகா, “100 கோடி அல்லது ரூ. 500-600 கோடி படங்கள் என்பது இனிமேல் யோசிக்கத் தேவையில்லை. சில சமயங்களில் அதிக பணம் கொடுத்து அது போதும் என்று நினைக்கிறார்கள், ஆனால் அது போதாது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை போதும். ஆரோக்கியமாக இருக்கும் போது மட்டுமே உங்கள் சிறந்ததை கொடுக்க முடியும்,” என்று கூறியுள்ளார்.