தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

திரையுலகை சேர்ந்தவர்கள் அவ்வப்போது பல்வேறு விமான பயணங்களை மேற்கொண்டு வந்தாலும் அடிக்கடி இதுபோன்ற பிரபலங்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாவது என்னவோ ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேவை தான். அந்த வகையில் லேட்டஸ்டாக பிரபல சிதார் இசை கலைஞர் ரவிசங்கரின் மகளான அனோஷ்கா சங்கர் தன்னுடைய சிதார் இசைக்கருவியை ஏர் இந்தியா விமான சேவை சேதப்படுத்தி விட்டது என்று சோசியல் மீடியாவில் ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கிட்டத்தட்ட 1000 விமான பயணங்களில் என்னுடைய உற்ற நண்பனாக பயணித்த இந்த சிதார் கருவியை ஏர் இந்தியா விமான நிறுவனத்தினர் கவனமின்மையுடன் கையாண்டதால் இது உடைந்து சேதம் அடைந்துள்ளது. இத்தனைக்கும் இதன் பாதுகாப்புக்காக சிறப்பு கட்டணம் வேறு செலுத்தி இருந்தேன். இத்தனை வருடங்களில் ஏர் இந்தியாவில் நான் பயணிப்பது இதுதான் முதல் முறை. இந்த முதல் முறையிலேயே இப்படி ஒரு மோசமான அனுபவத்தை எனக்கு ஏர் இந்தியா கொடுத்து விட்டது” இன்று தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் அனோஷ்கா சங்கருக்கு ஆதரவாக ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவைக்கு எதிராக தங்களது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.




