2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்குகிறவர். மனதில்பட்ட கருத்துக்களை துணிச்சலுடன் பேசக்கூடியவர். இதனால் அவ்வப்போது சில சிக்கல்களையும் சந்திப்பார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்.
டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா வெளியிட்ட சில கருத்துக்கள் இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக காஸ்டிங் இயக்குனர் முனாவர் அலி செய்யது என்பவர் மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய பாந்திரா போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து பாந்திரா போலீசார் தேசத்துரோகம், மோதலை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகை கங்கனா ரணவத்திற்கு மும்பை போலீசார் 3 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவர் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானது.
இந்தநிலையில் அவர் பாந்திரா போலீஸ் நிலையத்திற்கு நேற்று விசாரணைக்கு வந்தார். அவருக்கு மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. கங்கனா ரணவத்திடம் போலீசார் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.