சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது அவர் ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். தனது கணவரும், பாடகருமான நிக் ஜோன்சுடன் லண்டனில் வசித்து வருகிறார். கொரோனா காலத்தில் அங்குள்ள பெண்கள், சிறுவர்களுக்கு அங்குள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையல் பிரியங்கா நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அப்போது அவர் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பிரியங்காவை போலீசார் எச்சரித்து அனுப்பியதாகவும், அபராதம் விதித்ததாகவும் தகவல் பரவியது. ஆனால் இதை பிரியங்கா தரப்பு மறுத்துள்ளது.
இதுகுறித்து அவரின் செய்தி தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில், லண்டனில் சினிமா மற்றும் டிவி தொடர்களின் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தன் படத்தின் ஷுட்டிங்கிற்காக தலைமுடியை கலரிங் செய்ய சலூன் கடைக்கு சென்றார். அதற்கான உரிய அனுமதியை பெற்றே அவர் அங்கு சென்றுள்ளார். கொரோனா விதிமுறை எதையும் அவர் மீறவில்லை. அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான தகவலும் உண்மையல்ல என தெரிவித்துள்ளார்.