இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
2000ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் பெற்றவர் பிரியங்கா சோப்ரா. அதையடுத்து விஜய் நடித்த தமிழன் என்ற படத்தில் அவர் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த வகையில் பிரியங்கா சோப்ராவின் முதல் ஹீரோ விஜய் தான்.
அதன்பிறகு பாலிவுட், ஹாலிவுட் என்று பிரபலமாகி விட்ட பிரியங்கா சோப்ரா, தற்போது அன்பினிஷ்டு என்ற தலைப்பில் தனது வாழ்வில் நடந்த நல்ல, கெட்ட அனுபவங்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் தனது முதல் ஹீரோவான விஜய்யைப் பற்றி கூறுகையில், விஜய்யின் பணிவும், ரசிகர்களுடன் அவர் வைத்துள்ள நெருக்கமும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது. குறிப்பாக, அமெக்காவில் குவாண்டிகா தொடரில் நடித்து வந்தபோது ரசிகர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். அப்போது விஜய் தனது ரசிகர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டதை நான் நினைவில் கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.