பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் |
பாலிவுட்டின் பிரபல கூட்டணியான இயக்குனர் ரோஹித் ஷெட்டி, நடிகர் அக்ஷய் குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் 'சூர்யவன்ஷி'.. காத்ரீனா கைப் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் வரும் ஏப்-2ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ஆனால் தற்போது அதன் ரிலீஸில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.
அதாவது இந்தப்படம் ஓடிடிக்கு கொடுக்கப்படாமல் நேரடியாக தியேட்டர்களிலேயே தான் வெளியாக இருக்கிறது. ஆனால் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் இந்தப்படத்தை திரையிடுவதில் லாப சதவீதம் குறித்த பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. அதனால் பிவிஆர், ஐநாக்ஸ், கார்னிவல் போன்ற மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் சூர்யவன்ஷி ரிலீஸாகது என்று சொல்லப்படுகிறது.
அதேசமயம் ஒற்றை தியேட்டர்களில் இந்தப்படம் ரிலீஸாவதில் எந்த சிக்கலும் இல்லையாம். இப்படி பிரச்சனைக்கு தீர்வு காணாமல் படத்தை வெளியிட்டால், அது இருதரப்புக்குமே நட்டத்தையே ஏற்படுத்தும் என விநியோகஸ்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.