கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் பாலிவுட் மீளவில்லை. இந்த நிலையில் அவரது நண்பரும் எம்.எஸ்.டோனி படத்தில் அவருடன் நடித்தவருமான சந்தீப் நஹாரும் மும்பை ஜார்ஜியான் பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹரியானாவில் பிறந்த சந்தீப் நடிக்கும் ஆசையில் கடந்த 2009ம் ஆண்டு மும்பைக்கு வந்தார். 2016ம் ஆண்டு எம்.எஸ்.தோனி படத்தில் நடித்தார். தோனி படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நடித்து வந்தார். இந்த நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தான் தற்கொலை செய்து கொள்ள தனது மனைவியின் டார்ச்சரே காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து மும்பை ஜார்ஜியா பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.