தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சில வருடங்களுக்கு முன்பு வரை பாலிவுட்டில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சுனில் ஷெட்டி. தற்போது குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களுக்கு தன்னை மாற்றி கொண்ட சுனில் ஷெட்டி, தர்பார், பயில்வான், விரைவில் வெளியாக இருக்கும் 'மரைக்கார்' என தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகராக மாறிவிட்டார். இந்தநிலையில் அவரது மகன் ஆஹான் ஷெட்டியும் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். பிரபல இயக்குனரான சாஜித் நடியத்வாலா டைரக்சனில் உருவாகும் 'தடாப்' என்கிற படத்தில் தான் இவர் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படம் செப்-24ஆம் தேதி ரிலீசாகிறது.
படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளதுடன் ஆஹான் ஷெட்டியின் அறிமுகம் குறித்த தகவலையும் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் அக்சய் குமார். மேலும் அவர் ஆஹான் ஷெட்டி பற்றி கூறும்போது, “உன்னுடைய தந்தை அறிமுகமான 'பயில்வான்' படத்தின் போஸ்டரில் இருந்து அவரை பார்த்து வருகிறேன். இப்போது நீ ஹீரோவாக அறிமுகமாகும் போஸ்டரை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன்” என கூறியுள்ளார்.
அக்சய் குமாரும் சுனில் ஷெட்டியும் தொண்ணூறுகளின் ஆரம்பகாலத்தில் ஒரே சமயத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..