50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு |
பாலிவுட் நடிகை ஆலியா பட் ன்னணி நடிகையாக இருக்கிறார். அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார். சமீபத்தில் மும்பையில் 30 கோடி ரூபாயில் வீடு வாங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். தற்போது மும்பை பெண் தாதா கங்குவாய் படத்திலும், எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடித்து வருகிறார்.
ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது ஆலியா பட்டும் தந்தையின் வழியில் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். என்டர்னல் சன்சைன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் சிறிய மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். இந்த நிறுவனத்தை ஆலியாபட்டின் சகோதரி நிர்வகிக்க இருக்கிறார்.