இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் டில்லியில் உள்ள மால் ஒன்றில் அமைந்துள்ள பப் ஒன்றுக்கு சென்றபோது தாக்கப்பட்டார் என்பது போன்று ஒரு வீடியோவும், அதுகுறித்த செய்தியும் சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. ஆனால் இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என அஜய் தேவ்கன் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அஜய் தேவ்கன் குழுவினர் வெளியிட்டுள்ள செய்தியில், “ஆதாரமற்ற செய்திகளையும் யாரோ தாக்கப்பட்டதை அஜய் தேவகன் தாக்கப்பட்டது போன்று தவறாக சித்தரித்தும் வதந்திகளை பரப்ப வேண்டாம். அஜய் தேவ்கன் டில்லிக்கே போகவில்லை. கொரோனா தாக்கம் துவங்கியதிலிருந்து கடந்த பதினான்கு மாதங்களாக அவர் மும்பையில் தான் இருக்கிறார். பின் எப்படி அவர் டில்லியில் தாக்கப்பட்டிருக்க முடியும்..?” என அதில் கூறியுள்ளனர்.