மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் அதிக வேகத்துடன் பரவி வருகிறது. பல முன்னணி பாலிவுட் நடிகர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல படங்கள் தங்கள் வெளியீட்டை தள்ளி வைத்து வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது வார இறுதியில் ஊடரங்கும், வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அமுலில் இருக்கிறது. தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் தியேட்டர்களை வருகிற ஏப்ரல் 30ந் தேதி வரை மூட அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 30ந் தேதிக்கு பிறகு சூழ்நிலையை பொறுத்து முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.