இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் அதிக வேகத்துடன் பரவி வருகிறது. பல முன்னணி பாலிவுட் நடிகர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல படங்கள் தங்கள் வெளியீட்டை தள்ளி வைத்து வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது வார இறுதியில் ஊடரங்கும், வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அமுலில் இருக்கிறது. தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் தியேட்டர்களை வருகிற ஏப்ரல் 30ந் தேதி வரை மூட அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 30ந் தேதிக்கு பிறகு சூழ்நிலையை பொறுத்து முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.