மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் 'மதராஸி' திரைப்படம் வெளியாகி ஓரளவு டீசன்டான வெற்றியை பெற்ற நிலையில் அவரது நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' திரைப்படம் வரும் ஜனவரியில் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழில் அவர் நடிக்கும் படங்களின் பட்டியலும் வரிசை கட்டி நிற்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் மும்பை சென்ற சிவகார்த்திகேயன் அங்கே பிரபல பாலிவுட் இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ள நிகழ்வு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் இயக்குனர் மணிரத்னம் போல பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்கள் அனைவருமே நடிக்க விரும்பும் ஒரு இயக்குனர் தான் சஞ்சய் லீலா பன்சாலி. சமீப வருடங்களாக வரலாற்று புகழ்வாய்ந்த குறிப்பாக பெண் ஆளுமைகள் பற்றி தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் அவரை சிவகார்த்திகேயன் சந்தித்து இருப்பதன் மூலம் நேரடியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பாலிவுட்டில் நுழையும் முயற்சியா என்று தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.