இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவி படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளவர் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத்.
பாலிவுட்டில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் கங்கனா திரையுலகத்திற்கு வந்து இன்றுடன் 15 வருடங்கள் ஆகிறது. தன்னுடைய திரையுலகப் பயணத்தை ஷாரூக்கானுடன் ஒப்பிட்டு அவர் இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“15 வருடங்களுக்கு முன்பு, இன்று தான் கேங்ஸ்டர் படம் வெளியானது. ஷாரூக்கான் ஜி மற்றும் நான் ஆகிய இருவருடைய கதைகள் தான் மிகப் பெரும் வெற்றிக் கதைகள். ஆனால், ஷாரூக்கான டில்லியிலிருந்து வந்தவர், கான்வென்ட்டில் படித்தவர், அவருடைய பெற்றோர் சினிமாவில் இருந்தனர்.
எனக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் தெரியாது, படிப்பு கிடையாது, ஹிமாச்சல் பிரதேசத்தின் ஒரு தொலைதூர கிராமத்திலிருந்து வந்தவள். என் வாழ்வை பரிதாபமாக்கிய, என்னுடைய அப்பா, தாத்தா ஆகியோரிடம் சண்டையிட்டு ஒவ்வொரு அடியாக போராடித்தான் வந்தேன். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வளவு வெற்றிக்குப் பின்னும், வாழ்வதற்கு ஒவ்வொரு நாளும் போராடித்தான் வருகிறேன், ஆனால் முற்றிலும் மதிப்பானவை அவை. ஒவ்வொருவருக்கும் நன்றி,” என தன்னுடைய 15 வருட திரையுலக அனுபவம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.