தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் |

2009ல் வெளியான ‛வைகை' படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை சுவாசிகா. அதன்பின் சில படங்களில் நடித்தாலும் கடந்தாண்டு வெளியான ‛லப்பர் பந்து' அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து மாமன், ரெட்ரோ போன்ற படங்களில் நடித்தார். தற்போது கருப்பு படத்தில் நடித்துள்ளார். சினிமா படங்கள், வெப்சீரிஸ் இரண்டிலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்கிறார்.
சினிமாவில் நடக்கும் பாலியல் தொந்தரவு தொடர்பாக இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது ‛‛15 ஆண்டுகளாக இந்த துறையில் உள்ளேன். நான் அதுபோன்று எந்த பிரச்னையையும் சந்திக்கவில்லை. இந்த பிரச்னை சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் நடக்கிறது. இதை தடுக்க கடுமையான சட்டங்கள் வேண்டும். பெண்கள் வாழ்வில் முன்னேற தைரியமாக இருக்க வேண்டும். எந்த இடத்திலும் வளைந்து செல்லக்கூடாது. ஒருவராக தவறாக நடக்க முயன்றால் அவர்களை எதிர்கொள்ளவும், சமூகத்தின் முன் நிறுத்தவும் தயங்க கூடாது'' என்றார்.