தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'லப்பர் பந்து' படத்தில் அட்டக்கத்தி தினேஷ் ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் சுவாசிகா. அந்த படத்தில் அவர் நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுகள், நிறைய விருதுகளும் வாங்கினார். அந்த படத்தின் வெற்றி காரணமாக சூரியின் 'மாமன், ரெட்ரோ, கருப்பு' உட்பட பல படங்களில் கமிட்டானார். மாமனும் வெற்றி பெற சுவாசிகா மார்க்கெட் எகிறியுள்ளது.
இந்நிலையில், அவர் நடித்த 'போகி' படம் இந்த வாரம் வெளியாகிறது. அந்த படம் குறித்து சுவாசிகா எதுவும் பேசவில்லை. அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து படக்குழுவிடம் கேட்டால், அவர் வேறு படத்தில் பிசி என ஒதுக்கிக்கொண்டனர். உண்மையில் இந்த படம் குறித்து சுவாசிகா பேச விரும்பவில்லையாம்.
காரணம், 2009ம் ஆண்டு 'வைகை' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் சுவாசிகா. அப்போது அவர் பெயர் விசாகா. அடுத்து 'கோரிப்பாளையம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்தவகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஹீரோ தங்கையாக அவர் நடித்த படம் 'போகி'. அந்த படத்துக்கு அப்போதைய தலைப்பும் வேறு. பல சிக்கல்களில் பல ஆண்டு இடைவெளிக்குபின் இந்த வாரம் 'போகி' ரிலீஸ் ஆகிறது.
இப்போது சுவாசிகா மார்க்கெட் நிலவரம் வேறு என்பதால் போகி குறித்து பேச விரும்பவில்லையாம். மலைவாழ் கிராமத்தில் நன்றாக படித்து டாக்டர் ஆகும் சுவாசிகாவுக்கு வில்லன் கும்பலால் என்ன நடக்கிறது. அதற்கு அண்ணனான ஹீரோவும், அவர் காதலனும் எப்படி பழிவாங்குகிறார்கள் என்ற ரீதியில் போகி கதை செல்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தேனிக்கு மேலே உள்ள மலை வாழ் கிராமத்தில் நடந்தது. சாலை, தங்குமிடம் போன்ற வசதிகள் கிடையாது. அவர் அங்குள்ள வீட்டில் தங்கி, படப்பிடிப்புக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார் என்று படக்குழு அவரை புகழ்ந்தாலும், தான் நடித்த பழைய படம் குறித்து இமேஜ் காரணமாக பேசாமல் எஸ்கேப் ஆகிறாராம் சுவாசிகா.