பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? |
சுபலட்சுமி பிலிம்ஸ் சார்பாக கே. முருகன் தயாரித்துள்ள படம் 'உழவர் மகன்'. தோனி கபடிகுழு, கட்சிக்காரன் படங்களை இயக்கிய ப. ஐயப்பன் இயக்கியிருக்கிறார். கதையின் நாயகனாக கௌஷிக் நடித்துள்ளார்.
நாயகிகளாக சிம்ரன் ராஜ் மற்றும் வின்சிட்டா ஜார்ஜ் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் இருவரும் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். இவர்கள் தவிர விஜித் சரவணன் ,யோகிராம், ரஞ்சன் குமார், சிவசேனாதிபதி, குமர வடிவேல் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: இன்று அதிகார வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருப்பது விவசாயம்.தொழில் உத்திரவாதம் இல்லாத விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயிகள் நாளும் துயரங்களையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.விவசாயிகளின் சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம்.
உயிர்த்தொழிலான பயிர்த் தொழிலை மீட்க செய்ய என்ன செய்ய வேண்டும்? அது வளர்வதற்கும் மறுமலர்ச்சி காண்பதற்கும் தடைகளாக இருப்பவை எவை போன்றவற்றைப் பற்றியெல்லாம் இந்தப் படம் பேசுகிறது.விவசாய மண், தொழில் சார்ந்த பிரச்னைகளைப் பற்றிப் பேசும் இந்தக் கதைக்குள் ஒரு காதல் கதையும் உள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம், என்றார்.