வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மலையாள நடிகையான சுவாசிகா தமிழில் ‛வைகை, கோரிப்பாளையம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 15 ஆண்டுகளாக அவர் நடித்து வந்தாலும் கடந்தாண்டு வெளிவந்த ‛லப்பர் பந்து' படம் மூலம் தான் அதிகம் பிரபலமானார். இந்த படத்திற்கு பின் தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. சமீபத்தில் மாமன், ரெட்ரோ படத்தில் நடித்திருந்தார். தற்போது சூர்யா 45, விஜய் ஆண்டனியின் படம் என சில படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் சுவாசிகா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, "சூர்யா 45வது படத்தில் ரொம்ப வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, என்னிடம் 'இதுற்கு முன் நீங்கள் நடித்த எந்தவொரு கதாபாத்திரம் மாதிரியும் இதில் இருக்காது என்று கூறி தான் இந்த வாய்ப்பை தந்தார். மேலும் எனது தோழில் ஒருவர் ஹிந்தியில் ஷாருக்கான் 'லப்பர் பந்து' படத்தை பார்த்த பிறகு, 'அந்தப் படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறேன் என்று கூறினால், என்னுடைய மனைவி கேரக்டரில் அதே பொண்ணு தான் நடிக்கணும்னு சொல்வாரு என சொன்னார். அவர் சொன்னது போல ஷாரூக்கான் அந்த படத்தை பார்ப்பார், கூப்பிடுவார் என நம்புகிறேன், பார்ப்போம்" என நெகிழ்ச்சி உடன் தெரிவித்துள்ளார்.