‛கலைமாமணி' பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் | டாப் இயக்குனர்களுடனான கூட்டணி சரிவு : கவனிப்பாரா கமல்ஹாசன் ? | ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் |
சின்னத்திரையில் பல மொழிகளில் ஒளிபரப்பான பிரமாண்ட புராணத் தொடர் ஸ்ரீகிருஷ்ணா. இதில் பீஷ்மராக நடித்து புகழ்பெற்றவர் சுனில் நாகர். அதன்பிறகு ஹனுமான் தொடரில் பிரம்மனாக நடித்திருந்தார். சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தான் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், தன்னை மகன்கள் கைவிட்டு விட்டனர் என்றும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது சம்பாதித்த பணத்தை எல்லாம் என் மகனின் படிப்புக்கும், வளர்ச்சிக்கும் செலவு செய்தேன். ஆனால் இப்போது எனக்கு நடிப்பு வாய்ப்பும் இல்லை. முதுமையும் அடைந்து விட்டேன். இந்த நிலையில் என் மகன் என்னை கைவிட்டு விட்டான். உறவினர்களும் கைவிட்டு விட்டனர்.
தற்போது வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறேன். அந்த வீட்டிற்கும் என்னால் வாடகை கொடுக்க முடியவில்லை. நட்சத்திர ஓட்டல்களில் பாடல் பாடி அதன்மூலம் கிடைத்த வருமானத்தில் வாழ்ந்து வந்தேன். இப்போது கொரோனா காலத்தில் அந்த வேலையும் இல்லை. இதனால் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டு இந்தி நடிகர் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.