ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பாலிவுட் நடிகர், நடிகைகள் அதிக அளவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் தீபிகா படுகோனா கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு எதிலும் கலந்து கொள்ளாமல் தனது சொந்த ஊரான பெங்களூருவில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபிகா படுகோனேவின் தந்தை பிரகாஷ், தாய் உஜ்ஜால, தங்கை அனிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசிப்பதால் தீபிகாவைவும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து பரிசோதனை செய்து கொண்ட தீபிகாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.