அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது தர்மா புரொடக்சன்ஸ் சார்பில் படங்களை தயாரித்தும் மற்ற படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறார். குறிப்பாக லைகா நிறுவனத்துடன் இணைந்து பயணிக்க விரும்பிய கரண் ஜோஹர், லைகா தயாரித்த 2.0 படத்தை இந்தியில் வெளியிட்டார். இந்நிலையில் தற்போது லைகாவிடம் இருந்து ஒதுங்கி, ஜியோ நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து கொண்டுள்ளார் கரண் ஜோஹர். இதனால் லைகா நிறுவனம் டென்சன் ஆனதாக தெரிகிறது.
தற்போது அக்சய் குமார் நடித்து வரும் ராம் சேது படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக லைகா நிறுவனம், தன்னை இணைத்துக் கொன்டதே கரண் ஜோஹர் சொல்லித்தானாம். ஆனால் அவர் தங்களிடமிருந்து விலகியதால், தற்போது ராம்சேது பட மெயின் தயாரிப்பளருக்கு பணம் தருவதை நிறுத்தி வைத்திருக்கிறதாம் லைகா. இதனால் அக்சய் குமாருக்கு கொடுக்கப்பட்ட 30 கோடி ரூபாய் செக் ஒன்று, வங்கியிலிருந்து பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.. ஆனால் அக்சய் குமார் தரப்பிலோ, அப்படியெல்லாம் எதுவும் இல்லை என மறுக்கிறார்களாம்.