பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் |
விஜய் நடித்த 'தெறி, மெர்சல், பிகில்' என மூன்று படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் என இடம் பிடித்தவர் அட்லீ. இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது ஷாரூக்கான், அட்லீ இருவரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை ரசித்தனர். அதன்பின் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர். அப்போதே ஷாரூக்கான் நடிக்கப் போகும் ஹிந்திப் படத்தை அட்லீ இயக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக செய்திகள் வெளிவந்தன.
பின்னர் மும்பையில் ஷாரூக்கான் பிறந்தநாள் நிகழ்விலும் அட்லீ கலந்து கொண்டார். ஆனால், அவர்கள் இணையும் படம் பற்றி இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
தற்போது அவர்கள் கூட்டணி பற்றி ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. கடந்த மாதமே ஷாரூக்கை சந்தித்து அட்லீ படத்தின் முழு கதையையும் சொல்லிவிட்டாராம். ஷாரூக்கிற்கும் கதை பிடித்துவிட்டதாம், இந்த வருட இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்லீயின் இரண்டு வருடக் காத்திருப்பு இந்த வருடக் கடைசியில் முடிவுக்கு வரும் என்கிறார்கள்.