தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஓவர் நைட் பாப்புலர் என்பார்களே அது மாதிரி அர்ஜூன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு வந்தவர் ஷாலினி பாண்டே. தன்பிறகு மேரி நிம்மோ என்ற இந்தி படத்தில் நடித்தார்.
அடுத்த படமே பாலிவுட்டா என்ற எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். ஆனால் அந்த படம் வெற்றி பெறாதது ஷாலினிக்கு பின்னடைவை தந்தது. தமிழில் 100 பிரசண்ட் காதல் படத்தில் நடித்தார். அதுவும் கைகொடுக்கவில்லை. மேலும் சில படங்களில் நடித்தார்.
இப்போது மீண்டும் பாலிவுட்டுக்கு திரும்பி இருக்கிறார். ஏற்கெனவே ஜெயேஷ்பதி ஜோர்தார் படத்தில் நடித்து முடித்துள்ள அவர் தற்போது ஆமீர்கானின மகன் ஜுனைத் கான் அறிமுகமாகும் மகாராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சித்தார்த் மல்ஹோத்ரா இயக்குகிறார். 1982ம் ஆண்டு நடந்த பிரிஜ்நாத்ஜி மகராஜ் வழக்கை மையமாக கொண்டு இந்த படம் தயாராகிறது. இதில் ஜுனைத் கான் பத்திரிகையாளராக நடிக்கிறார்.
மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் முடிந்திருக்கிறது. ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது.




