திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரபுவதற்கு முன்பாகவே மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவியது. அங்கு கடந்த மாதத்திலிருந்து தொற்று பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. கடந்த வாரத்திற்கான தளர்வுகளில் சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. கடும் பாதுகாப்பு, கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்தலாம் என அனுமதிக்கப்பட்டது. வெளிப்புற படப்பிடிப்புகளை மாலை 5 மணிக்கு மேல் நடத்த அனுமதியில்லை.
அதன் காரணமாக தற்போது பாலிவுட்டில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பரபரப்பாக ஆரம்பமாகி நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். சில பெரிய படங்களின் படப்பிடிப்புகளுக்கு அதில் நடிக்கும் பெரிய நடிகர்களின் கால்ஷீட் காரணமாக இந்த வாரத்தில்தான் ஆரம்பமாகும் என்கிறார்கள். பல சினிமா பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பயமில்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முன் வருகிறார்களாம்.
தெலுங்கிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில்தான் தெலுங்குப் படங்களின் படப்பிடிப்புகள் அதிகம் நடக்கும். தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பும் அங்கு அதிகம் நடைபெறும் என்பதால் இங்கிருந்தும் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தெலுங்கு, தமிழில் சினிமா படப்பிடிப்புகள் இன்னும் பரபரப்பாக ஆரம்பமாகாமல் இருக்கிறது. அடுத்த வாரத்தில் அவை தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.