தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

என்ன தான் எதிர்ப்புகள், விமர்சனங்கள் இருந்தாலும் இந்தியாவில் இதுவரை வெளியான வெப் சீரிஸ்களில் பெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்து வருகிறது தி பேமிலி மேன் 2. அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, ப்ரியாமணி, ஷரத் கேல்கர், மைம்கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இயக்கியிருந்தனர்.
இலங்கை தமிழர்களையும், அங்கு நடந்த போராட்டத்தை இந்த தொடர் தவறாக சித்தரிப்பதாக கூறப்பட்டது. இதற்கு இயக்குனர்களும், நடிகை சமந்தாவும் விளக்கம் அளித்து விட்டார்கள். இந்த நிலையில் ஸ்ரீகாந்த் திவாரி கேரக்டரில் நடித்த மனோஜ் பாஜ்பாய் கூறியிருப்பதாவது:
நாங்கள் ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஒவ்வொரு மனிதருடைய நம்பிக்கையையும், கலாச்சாரத்தையும் மதிக்கிறோம். யாரையும் காயப்படுத்துவதற்காக நாங்கள் எதையும் செய்யவில்லை. முதல் சீசனிலும் சரி, இந்த சீசனிலும் சரி நாங்கள் அரசியல் குறித்துப் பேசவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதற்கே உரிய மனிதத்தன்மையுடன் அணுகி உள்ளோம்.
ஒவ்வொரு கேரக்டரும் அவர்களுடைய சொந்தக் கதையில் ஹீரோதான். இப்போது இத்தொடர் உங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஏனெனில் நீங்கள் பயந்த அளவுக்கு அது இல்லை என்பதை நீங்கள் எங்கோ ஓரிடத்தில் உணர்கிறீர்கள். அது உங்களைப் பற்றியும் உங்கள் நம்பிக்கைகளைப் பற்றியும் மிகவும் மரியாதையான வகையில் அன்புடன் பேசுகிறது.
இவ்வாறு மனோஜ் பாஜ்பாய் கூறியுள்ளார்.




