தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கரண் ஜோஹர். “குச் குச் ஹேதா ஹை, கபி குஷி கபி கம், கபி அல்விதா நா கெஹ்னா, மை நேம் இஸ் கான், ஸ்டூடன் ஆப்த இயர், பாம்பே டாக்கீஸ், ஹே தில் ஹை முஷ்கில்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
தனது தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்துள்ளார். கரண் ஜோஹர் கடைசியாக இயக்கிய படம் 2016ம் ஆண்டு வெளிவந்தது. கடந்த ஐந்து வருடங்களாக எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை. தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
தன்னுடைய இடைவெளிக்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தனது புதிய படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். ரன்வீர் சிங், ஆலியா பட் நடிக்க 'ராக்கி அஹவர் ராணிகி பிரேம் கஹானி' என்ற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துளளார். இன்று ரன்வீர் சிங் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு இப்படம் வெளியாகும்.
“லென்ஸுக்கு முன்னால் எனது அபிமான மக்கள் இருக்கா, அதன் பின்னால் நான் இருப்பது த்ரில்லிங்காக உள்ளது” என இந்த புதிய பட அறிவிப்பு குறித்து கரண் குறிப்பிட்டுள்ளார்.