படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

மும்பை: மூன்று தேசிய விருதுகளை வென்ற பாலிவுட் நடிகையான சுரேகா சிக்ரி இன்று (ஜூலை 16) காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு வயது 75.
மூன்று தேசிய விருதை பெற்ற பிரபலமான, சுரேகா சிக்ரி, 2018-ம் ஆண்டில் ஒரு தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது, மூளை பக்கவாதத்திற்கு ஆளானார். படப்பிடிப்பின் போது கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலமான காயம் ஏற்பட்டது. இதுவே இவருக்கு பக்கவாதம் ஏற்பட காரணம் என கூறப்பட்டது.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனி செவிலியரின் தீவிர கவனிப்பில் இருந்து அதில் இருந்து மீண்டார். பின்னர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்த சுரேகா சிக்ரிக்கு இன்று காலை 8:30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். சுரேகா சிக்ரி மறைவை தொடர்ந்து பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.




