தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும் புகழ்பெற்ற டி-சீரிஸ் ஆடியோ நிறுவனத்தின் உரிமையாளருமான பூஷண் குமார் மீது மும்பை டிஎன் நகர் காவல்நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுக்கப்பட்டு, எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. 30 வயதான பெண் ஒருவர் பூஷண்குமார் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூஷண்குமார் தரப்பினரோ இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். அவர்கள் தரப்பில் இருந்து வெளியிட்டுள்ள செய்தியின்படி, ‛‛சம்பந்தப்பட்ட பெண், தான் வெப்சீரிஸ் தயாரிக்கப்போவதாக பூஷண்குமாரை அணுகி அதற்காக பணம் கேட்டாராம். ஆனால் அதற்கு பூஷண்குமார் மறுத்துவிட்டதால், தன்னிடம் தவறாக நடந்ததாக வெளியில் கூறிவிடுவேன் என பணம் கேட்டு மிரட்டினாராம் அந்த பெண். அதற்கு பூஷண்குமார் மசியாததால், அவர்மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி புகார் அளித்துள்ளாராம். இதை சட்ட ரீதியாக சந்திப்போம்'' என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.